நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு



ஒருவர் : நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு


மற்றவர் : கைய கடித்துருசு கடிக்சிருச்சு


********************************************

எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன்

அது கட்டை எறும்பு


********************************************


இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.

********************************************
ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?

ம்....

ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்


********************************************
நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி

அவங்க பின் வாங்கிட்டாங்க


********************************************

தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?

அவர் வாட்ச்மேனாம்

********************************************

நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்

********************************************


"ஏம்பா சர்வர் , சாம்பார்ல பல்லி விழுந்திரூக்கே, இதுக்கு என்ன அர்த்தம்?"

சாரி சார் எனக்கு பல்லி விழும் பலன் தெரியாது



********************************************


தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.

இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்

அதுவரை நான் என்ன செய்வது ?

பென்ஸிலை உபயோகியுங்கள்.




Related Posts Plugin for WordPress, Blogger...