தண்ணீர் பஞ்சம்


தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் தீமைகள்: 

1. ஹீரோயின் குளிக்கிற சீன் பட்ஜெட் அதிகமாகி ஷங்கர் படத்துல மட்டும் வரும் :(

2. மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது.

3. மழையில்லாம வெள்ளைகாரனும் அடிக்கிற வெயிலுக்கு கருப்பாகிடுவான். அதுனால நான் நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்.

4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்.

5. ராமு: ஏன்பா சோமு உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு

சோமு: வந்தவங்க மூனு குடம் நல்ல தண்ணீர் வரதட்சனையா கேட்குறாங்கப்பா... அதுக்கு நான் எங்க போவேன்? (அழுகிறார் சோமு)

(”ராமு - சோமு”  பப்பு திருப்தியா?) 

6. கேரளாவுக்கு ரயில் மூலமாக தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் குடம் கடத்தல்.

தண்ணீர் பஞ்சத்துல இருக்குற நன்மைகள்: 

1.‘தண்ணியில கண்டம்’னு ஜோசியத்துல இருக்குற விசயத்துல இருந்து தப்பிக்கலாம்.

2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது? மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது!

3. தலைக்கு குளிக்காம எல்லாருக்கும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். (ஹி ஹி ஹி... )

நிறைய இருக்குங்க, இப்ப தண்ணி தாகம் எடுக்குது.. இருங்க தண்ணி குடிச்சுட்டு வந்து மீதியை சொல்றேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...