இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா?

இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"

"படத்தோட பேரு?"

"ஜிம்மி ரிடர்ன்ஸ்!"


-*****************************-*****************************-

''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''

''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''

''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''

''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''

-*****************************-*****************************-


டாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.

பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு

-*****************************-*****************************-

இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா?

இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க

-*****************************-*****************************-

கேடி 1 : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.

கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.

கேடி 1 : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது.


 --------------------------------------------------------------------

 மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "

******

"மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"

******

"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

******

"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

******

"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"

******

"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"

******

"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"




Related Posts Plugin for WordPress, Blogger...