அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர்

மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது.
மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு.
அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னன் பெரும் 'படையோடு' வந்து கொண்டிருக்கிறான்....
--------------------------------------------------------------------------------


அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை....
மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே.....
------------------------------------------------------------------------------
மன்னர் : அமைச்சரே, கவுரவம் பார்க்காமல் நீங்களே போய் சொறிந்து விட்டு வந்து விடுங்கள்...
மன்னர் : எதிரி மன்னன் படையுடன் வருகிறானாமே? ஏற்பாடுகள் தயாரா?
மந்திரி : எல்லா வெள்ளைக் கொடிகளும் தயார்.

மன்னன் : மந்திரியரே... தளபதி எங்கே ?..
மந்திரி : பக்கத்து நாட்டில் தளபதி போஸ்டிங் காலியா இருக்குன்னு... இண்ட்ர்வியு போயிருக்காரு....
------------------------------------------------------------------------------------------
மன்னர் : யாரங்கே?
சிப்பாய் : பேர் கூட தெரியாத நீயெல்லாம் ஒரு ராஜா.

ராஜா : ஏன் அவனை அடிக்கிறீங்க?
வீரன் : மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.
ராஜா : நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
வீரன் : அதைத்தான் சொல்லீட்டான்...!


அமைச்சர் : மன்னரே புறா மூலம் கடிதம் எழுதிய பக்கத்து நாட்டு மன்னனுக்கு என்னவென்று Acknowledgement அனுப்புவது?
மன்னர் : புறாக்கறி சூப்பர் என்று அனுப்பு.....
------------------------------------------------------------------------------------------------

ராசா நீங்க நம்ம ராணிட்ட எப்பவும் ஜாக்கரைதையா இருங்க
ஏன்
அவங்க கத்தியால பழத்தை அறுத்துக் கொண்டே இப்படி பாடுனாங்க.
என்ன பாடுனாங்க
' உன்னைத்தான் நானறிவேன்...மன்னவனை யார் அறிவார்'' னு பாடுறாங்க. மன்னா..பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வரான்.
எந்த பக்கத்துல இரு ந்து வரான்...
கிழக்கு பக்கத்துல இருந்து...மன்னா...
அப்ப வா ... மேற்க்கு பக்கமா ஓடிடலாம்....
---------------------------------------------------------------------------------------------------------------
மன்னா !!! எதிரிநாட்டு மன்னன் நரகத்திற்குத்தான் செல்வான் என்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது.
எப்படி ??
அவன் தன் படையோடு நம் நாட்டுக்குள் புகுந்துவிட்டான்.

அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?
மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?
அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்....

------------------------------------------------------------------------------------------------------
ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...

புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...

ஒசாமா : !!!!!!!!!!
Related Posts Plugin for WordPress, Blogger...