உனக்கு என்ன வரம் வேண்டும்

ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது.

********

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கனும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

********

புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்குச் செல்கிறான்.

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

********

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

------------------------------------------------------------------

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள். அதனால் பாவம் ஆண்கள் படும் அவஸ்தைகளைப் பாருங்களேன்!

இளைஞன்: நீண்ட நாள் வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
நண்பன்: திருமணம் செய்துகொள்.
இளைஞன்: திருமணம் அதற்கு உதவி செய்யுமா?
நண்பன்: இல்லை, இந்த மாதிரியான எண்ணங்கள் வாழ்நாளில் உனக்குத் திரும்ப வரவே வராது.


---------------------------------------------------------------------

திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:

“சுதந்திரதின வாழ்த்துக்கள்!!!”

(இது இருபாலருக்கும் பொருந்துமோ????)

*******

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாகும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா.. இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் ;கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!
Related Posts Plugin for WordPress, Blogger...