குழ‌ந்தை ஜோக்

குழ‌ந்தைகளு‌க்கு எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌ சொ‌ல்லு‌ங்‌க‌ள்.

 
பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு.

கடி காலம் சார்.


**************************************************


ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா?



மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure

**************************************************



என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க?


விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல..

**************************************************

உங்க டீச்சர் ஒரு நாளைக்கு சுமாரா எத்தனை பாடம் நடத்துவார்?

எல்லா பாடத்தையுமே அவர் சுமாராத்தான் நடத்துவார்.


**************************************************

ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?

மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?




**************************************************


பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..

என்னடா சொல்ற?

பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.



**************************************************

உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?

தெரியாது

Smiles

எப்படி?

முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.




**************************************************

ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?

மாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.



**************************************************
ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க?

நா‌ன் எ‌ப்போ சொ‌ன்னே‌ன்?

உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.




**************************************************

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.


Related Posts Plugin for WordPress, Blogger...