வேலக்காரிய மட்டும் விட்டுட்டு எங்கயாவது போயிடுங்க


சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

அப்போ பின்னாடி.

அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.


*********************************************


குவார்ட்டர் கோவிந்தன் : டாக்டர், நான் போதைல தெரியாம ஒரு எலியை உசுரோட முழுங்கிட்டேன். என்னை காப்பாத்துங்க!

டாக்டர் : இந்தாங்க, இந்த எலிமருந்தை சாப்பிட்டுங்க. எலி செத்திடும். அப்புறம் ஈசியா வெளியில் எடுத்திடலாம்!

*********************************************

மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க?

தண்ணி அடிச்சுட்டு, எப்பப்பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?

*********************************************

அம்மா, நாங்க புதுசா ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்கப் போறோம். உங்களால் ஏதாவது தர முடியுமா?

தாராளமா, என்னோட மாமியாரையும் மாமனாரையும் தர்றேனே.

*********************************************

மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன் : வேலக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போயிடுங்க.

*********************************************

சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலியே?

ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்சே?

*********************************************

ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?

மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?

*********************************************

வள்ளுவருக்கு வளையல், மோதிரம் நெக்லஸை விட தோடு, தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும். தெரியுமா?

எப்படி?

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!

*********************************************

Related Posts Plugin for WordPress, Blogger...