சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம்

நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ?
நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?
மனைவி : இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

நண்பர் 1 : அந்த ஊர்ல நிறைய கடன் வாங்கினேன் அதனால இந்த ஊருக்கு வந்தேன். இங்கேயும் கடன் வாங்கறேன்.
நண்பர் 2 : இப்படி கடன் வாங்கறது சரியா சொல்லு?
நண்பர் 1 : நான் கேட்கும்போதெல்லாம் தர்றாங்களே அது மட்டும் சரியா சொல்லு.

கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : இதுவாடா முடியும்

வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..

பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.
வேலு : எத வச்சு சொல்ற?
பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.

காதலி : நேற்று உங்க நண்பர் ராஜுவும் இதே ரோஜாவைக் கொடுத்துதான் ஐ லவ்யூ சொன்னார்
காதலன் : தப்பு,, தப்பு அது வேற ரோஜாவா இருக்கும். இது இன்னிக்கு எங்க தோட்டத்தில் நானே பறிச்சது.

ரமனன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?
Related Posts Plugin for WordPress, Blogger...