ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க

 

தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்?அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.




  • தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்.என்னவாம்?
    எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!






  • எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.






  • மழை வர்ற சமயமெல்லாம் ஏன் தலைவர் ஓடிப் போய் ஸ்கூல் பக்கம் நின்னுக்கிறாரு?தலைவர் மழைக்கு கூட பள்ளிபக்கம் ஒதுங்கியது இல்லைனு எதிர்கட்சி தலைவர் பேசுறதை தடுத்து நிறுத்தத்தான்.






  • தலைவர் ஒரு சோடா பைத்தியம்னு எப்படி சொல்லற?அன்பார்ந்தனு பேசினதும் சோடா கொடுங்கப்பாங்கிறாரு.






  • நேத்து நடந்த கல்யாணத்துல தலைவர் மானத்தை வாங்கிட்டார்என்னாச்சி?
    திருமணத்தை நடத்தி வைத்தநான், சாந்தி முகூர்த்தத்தையும் நடத்திவைத்து மணமக்களை சந்தோஷப் படுத்துவேன்னு சொல்லிட்டார்.






  • ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க சொல்லி மேலிட உத்தரவு, என்ன பண்ணலாம்? ------------------நாலு பூனைகளை வாங்கிட்டு போகலாம் சார்.
    Related Posts Plugin for WordPress, Blogger...