“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்

ஒரு மாறுப்பட்ட கற்பனை

அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,
என் மனம் “வந்துட்டாயா வந்துட்டாயா” என்று அலறும்…

“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்றேன்…
அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்….

நீ தான் நான் முதன்முதலாக காதலிக்கிற பெண் என்றேன்…
“அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்
காதலிக்கிறேன் என்று சொன்னாயே!” என்றாள்.
“அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்” என்றேன்…

“இப்போ என்ன? உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?” என்றாள்
“க க க போ” என்றேன்..
“முடியாது! என்று சொன்னாள், என்ன செய்வாய்” என்றாள்..
சற்றே யோசித்து விட்டு “நான், அழுதுடுவேன்!” என்றேன்…

ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்…
“என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்” என்று அதட்டினேன்…..

அவள் சோகமாய், என்னை பார்த்தாள்…
“நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,
குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்” என்றேன்…

எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்…
“பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,
வென்றிடலாம் எனது மாமாவை” என்றேன்…

இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,
இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்…
“ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,
எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்றேன்…

பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,
ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை…
அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,
Related Posts Plugin for WordPress, Blogger...