மாமூல் வாழ்க்கை


இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற் றி வருகிறார்கள்.அங்கே கொலை விலை போகுதாம்.




  • லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை?கரும்பு இன்ஸ்பெட்டரை.


    ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!




  • மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.ஏன் சலிச்சிக்கிறீங்க?
    பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.




  • திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்?தொப்பைதான்.




  • என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!




  • வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...! என்ன தப்பு செஞ்சீங்க?நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!




  • அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.அப்புறம்?
    கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.
    பின்ன என்ன ஆச்சு?
    கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.




  • கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பி ரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!




  • திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!


    Related Posts Plugin for WordPress, Blogger...